search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி பேராசிரியர் தற்கொலை"

    • ஜேக்கப் சென்னை சுவேதா என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
    • ஜேக்கப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மகன் ஜேக்கப் (வயது 30). இவர் சென்னை சுவேதா என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல் செல்வதாக தனது வீட்டில் கூறி விட்டு சென்றார்.

    திண்டுக்கல் வந்த ஜேக்கப் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அங்கு மின் விசிறியில் தூக்குபோட்ட நிலையில் ஜேக்கப் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×